நகராட்சி பணியாளர்களின் அவல நிலை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள நகராட்சி பணியாளர்கள் மழைக்காலங்களில் குப்பைக் கிடங்கு மற்றும் காவாய்க்களில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றுவது வழக்கம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அந்த வேலைகள் செய்வதற்குண்டான கையுறை மற்றும் சேஃப்டி பொருட்கள் இல்லாமல் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு கண்ணாடி, இரும்பு ஆகிய வற்றால் காயம் ஏற்பட்டால் செப்டிக் ஆகிவிடும். நகராட்சி ஆய்வாளர்கள் இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இதுக்குண்டான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். கை உறைகள், மண்வெட்டி, இடுக்கி, மாஸ்க் ஆகியவற்றை அவர்களுக்கு எளிதாக கிடைக்குமாறு செய்து தர வேண்டும். அவர்கள் எந்தவித அச்சமும் இன்றி நோய்கள் வரும் என்ற ஒரு எண்ணவும் இல்லாமல் பணியாற்றுகிறார்கள்.

எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் நகராட்சி பணியாளர் ஒருவர் வடிகால் அடைப்பு சரி செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைக் கண்டாவது மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா பாதுகாப்பு நல்வார்களா எனக் பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts