பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வால்பாறையில் கலை நிகழ்ச்சி பொதுமக்கள் மகிழ்ச்சி!!

கோவை மாவட்டம் வால்பாறை நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில் 73 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வால்பாறை காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் தீர்த்துக் குடம் எடுத்து ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனைத் தொடர்ந்து
பக்தர்கள் அரோகரா அரோகரா முருகா என்ற முழக்கத்துடன் பக்தி பரவசத்துடன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு நெய் அபிஷேகம் பஞ்சாமிர்த அபிஷேகம் திருநீறு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் கரகாட்டம், காவடியாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு கண்டு மகிழ்ந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை

-பேபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts