வால்பாறையில் கனமழை சேடல் டேம் அருகே வீட்டின் மேல் விழுந்த மரம்! – கவலையில் குடும்பத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதிக்குட்பட்ட வால்பாறை அருகாமையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சார்ந்த சேடல் டேம் பகுதியில் கோடை மழை 2 மணி நேரத்திற்கு மேல் வெளுத்து வாங்கியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் செல்வம் வயது 45 கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி இந்துமதி. எதிர்பாராமல் இடியுடன் கனமழை பெய்து அவர்களின் வீட்டின் மேல் கூரை மேல் மரம் வேரோடு சாய்ந்ததால் அப்பகுதியில் மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்று வார்டு கவுன்சிலர் சிற்றரசு வீட்டின் உரிமையாளர்களை நேரில் சென்று ஆறுதல் கூறி மரத்தை அகற்றும் பணியை பார்வையிட்டனர். வீட்டின் பொருள்கள் அனைத்தும் சேதம் அடைந்ததால் குடும்பத்தினர்.கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை

-பேபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts