வைப்பாற்றில் மிதந்த முதியவர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை!!

எட்டயபுரம் அருகே வைப்பாற்றில் மிதந்த 70 வயது முதியவர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள நம்பிபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் கிருஷ்ணசாமி (70). இவருக்கு சண்முககனி என்ற மனைவியும் 4 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், கிருஷ்ணசாமி கடந்த 6 மாதமாக மனம் நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார்

நேற்று பாத்ரூம் செல்வதாக சொல்லிச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று கீழ நம்பிபுரம் ஊருக்கு வடக்கே உள்ள வைப்பாற்றில் இறந்து மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts