கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை அருகாமையில் உள்ள முக்கோட்முடி பகுதியில் இன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குனி அலி (60) ஹர்ஷிதா (19) இருவரும் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்ட பொழுது எதிர்பாராமல் காட்டெருமை தாண்டியதால் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அருகில் உள்ள முடிஸ் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து அப்பகுதியில் இருந்து 108 வாகனத்தில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்காக இருவரையும் பொள்ளாச்சி அனுப்பி வைக்கப்பட்டதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மானாம்பள்ளி வனத்துறையினர் மனிதநேயத்துடன் இருவருக்கும் சுமார் 5000,5000 ரூபாய் வழங்கி பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை
-பேபி.