விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் 8-ம் நாள் திருவிழா – மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக வந்த அரசு அலுவலர்கள் : பச்சை சாத்தி எழுந்தருளிய நடராஜர் வீதி உலா!”
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் 8-ம் நாள் திருவிழாவினை முன்னிட்டு விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். இதில் சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு பால், தயிர், திருநீறு, சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விவசாயம் செழித்து மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீ நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 30-ம் ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது . இதில் 8-ம் திருவிழாவான விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்கண்டையன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித். தங்கவேல் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என ஏராளமானோர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சுவாமி அம்பாள் எழுந்தருளிய சப்பரத்தினை வடம் பிடித்து இழுத்து நகர்வலம் வந்தனர். பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
(விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 8-ம் திருநாளான நடராஜர் பச்சை சாத்தி பக்தர்களுக்கு எழுந்தருளும் நிகழ்வானது, விவசாயம் செழித்து பசுமையுடன் உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.)
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.