தூத்துக்குடி தாளமுத்துநகர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சூசைமாணிக்கம் மகன் அந்தோணி விஜயன். ஆட்டோ டிரைவரான இவர் தனது ஆட்டோவில் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகள் காளிஸ்வரி (16), உட்பட சிறுவர், சிறுமிகளை மொட்ட கோபுரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கடற்கரையில் இருந்து சற்று தொலைவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த அந்தோணி விஜயன் மற்றும் காளீஸ்வரி ஆகியோர் கடலில் மூழ்கினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் காளீஸ்வரின் உடல் நேற்று இரவு கரை ஒதுங்கியது. மேலும் ஆட்டோ டிரைவர் உடலும் மொட்ட கோபுரம் அருகே கடலில் பாறைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரது உடலையும் போலீசார் மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக தூத்துக்குடி தருவைகுளம் மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.