கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை பகுதிக்கு தேசிய மீட்பு குழுப்படையினர் 90 பேர் வந்துள்ளனர். இதில் 30 பேர் என்ற அடிப்படையில் மூன்று குழுக்களாக பிரிந்து பணியாற்ற உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆழியார் முதல் சோலையார் டேம் வரை உள்ள சாலைகளில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்தும் வேலையிலும் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெற்றால் உடனடியாக பகுதிக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் பொது மக்களுக்கு தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
.குறிப்பாக மழைக்காலங்களில் சாலைகளில் எப்படி பயணிப்பது எப்படி வாகனத்தை இயக்குவது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் எப்படி தங்களையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதே மேலும் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது உள்ளிட்டவற்றை எடுத்துரைத்து பொது மக்களுக்கு தேசிய பாதுகாப்பு குழுவினருடன் தீயணைப்புத் துறையினரும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-பேபி, வால்பாறை.