கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இளம் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அவர்களை நிர்வாணப்படுத்தி விடியோ எடுத்த இளைஞர்கள் அந்த பெண்களிடம் வீடியோவை காட்டி பலமுறை அத்துமீறியுள்ளனர்.
இதில் சில வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த வழக்கை பொள்ளாச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்த நிலையில் வழக்கு சி.பி.ஐ வசம் சென்றது. இதில் சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், ஹரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்
சாட்சிகளை கலைத்துவிடுவார்கள் என்ற வாதத்தின் அடிப்படையில் 9 பேருக்கும் ஜாமின் வழங்கப்படவில்லை இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இவ்வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பை வாசித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதில் 9 பேரும் குற்றவாளிகள் என்பதை முதலில் உறுதி செய்தார். இதனை அடுத்து சிறிய இடைவேளைக்குப் பிறகு 9 பேரையும் சாகும் வரை சிறையிலடைக்க அதிரடி தீர்ப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு தலா ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும், குற்றவாளிகள் 9 பேருக்கும் ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த தண்டனை காலத்தில் குற்றவாளிகளுக்கு எந்த ஒரு நிவாரணமும் சலுகையும் வழங்கக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான ஒரு வழக்கை பெண் நீதிபதி நீதி வழங்கியிருப்பது நீதி தேவதையின் கட்டளையாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பரபரப்பான தீர்ப்பை ஒட்டுமொத்த மக்களும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஆணவம் கொண்டு அநியாயம் செய்பவர்களுக்கு இப்பிறவியிலேயே தண்டனை கிடைக்கும் என்ற சிந்தனையோடு
-M.சுரேஷ்குமார்.