கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோமங்கலம் புதூர் பைபாஸ் சாலையில் விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பனிமனை சேர்ந்த TN 67 N 1548 பேருந்தின் ஓட்டுநர் அருள்மூர்த்தி என்பவர் பொள்ளாச்சி – சிவகாசி செல்லும் பேருந்தை மது போதையில் இயக்கி கோமங்கலம் புதூர் டோல்கேட் அருகே பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் தாறுமாறாக ஓட்டியுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்ட பின்னர் பேருந்தை நிறுத்தியுள்ளார். இதுகுறித்து கோமங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்படவில்லை என்றாலும் பயணிகள் பெரும் அச்சம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M. சுரேஷ்குமார்.