வால்பாறையில் யானை தாக்கி மூதாட்டி பலி அச்சத்துடன் மக்கள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை அடுத்த சோலையார் டேம் இடதுகரை குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அங்கிருந்த மூதாட்டி ஒருவரை தாக்கியது. இதில் மேரியம்மாள் (60) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அங்கிருந்த மற்றொரு மூதாட்டி தப்பி ஓடும் போது காயமடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் யானை தாக்கி உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை

-பேபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts