கோவை மாவட்டம் வால்பாறை தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 48 மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர் 600-க்கு 572 மதிப்பெண்கள் பெற்று எஸ். ஹரிணி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இரண்டாவது இடமாக சோபியா ஜெ 600 க்கு 552 மதிப்பெண்ணும் மூன்றாம் இடமாக 533 மதிப்பெண் எம் மதி என்ற மாணவியும் பெற்றுள்ளனர்.
500க்கு மேல் நான்கு மாணவிகளும் 400க்கு மேல் 27 மாணவிகளும் எடுத்துள்ளனர். வெற்றி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் பள்ளி தாளாளர் அருட் சகோதரி ரெஜினா மேரி மற்றும் பள்ளி முதல்வர் அருட்சகோதரி சுசீலா மேரி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மேலும் இப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக 100% தேர்ச்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-P.பரமசிவம் வால்பாறை.
👆🏻