Trending

கோவை பொள்ளாச்சி R.T.O. சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!! கட்டுக்கட்டாய் சிக்கியது லஞ்ச பணம்..!! விசாரணை தீவிரம்!!

கோவை கந்தே கவுண்டன் சாவடி மற்றும் பொள்ளாச்சி கோபாலபுரம் உள்ளிட்ட RTO சோதனைச் சாவடிகளில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்நிலையில், சோதனையின் போது கந்தே கவுண்டன் சோதனைச் சாவடியில் 1,47,560 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு அங்கு பணியில் இருந்த சதீஷ் ஜெயச்சந்திரன் மற்றும் உதவியாளர் லோகநாதன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனை சாவடியில் கணக்கில் வராத 66,080 ரூபாய்
பறிமுதல் செய்து அங்கு பணியில் இருந்த தமிழ்ச்செல்வி மற்றும் சிவகுரு ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் போக்குவரத்துத் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts