கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள தேடல் டேம் பகுதியில் முந்நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி பல நாட்களாக தரமற்ற முறையில் உள்ளது. அப்பகுதியில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குடிநீர் தொட்டி மிகவும் தரமற்ற முறையில் உள்ளது என்று கவுன்சிலரிடமும் நகராட்சி ஆணையர் ஆய்வாளர் குடிநீர் வாரிய அதிகாரிகளிடமும் கூறி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். அப்பகுதியில் சரியான முறையில் குடிநீர் இல்லாமல் குடிநீர் பற்றாக்குறையும் உள்ளது.
குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யகுமார்.