பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பாலை தரையில் கொட்டி போராட்டம்!!

பால் உற்பத்தி விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பாலை தரையில் கொட்டி கயத்தாரில் போராட்டம்…..

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் மெயின் பஜாரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பால் உற்பத்தி விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பாலை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி ராமசுப்பு தலைமை தாங்கினார். நியூட்டன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மாநில செயலாளர் பி பெருமாள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆர் ராகவன் மாவட்ட செயலாளர் பா புவிராஜ், சீனி பாண்டியன், பாலமுருகன், பரமசிவ பாண்டியன், ஜீவராஜ், லிங்கையா, சிபிஎம் தாலுகா செயலாளர் சாலமன்ராஜ் உள்ளிட்ட சுமார் 200 க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

போராட்ட முடிவில் ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts