விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மதுரைக்கு அடுத்தபடியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகள் எழுந்தருளி அருள் பாலிக்கும் விசேஷமான தலமாக விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் விளங்கி வருகிறது. அவ்வாறு விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், மதுரை மீனாட்சி திருக்கோவிலில் நடக்கும் அனைத்து விழாக்களும் வைபவங்களும் இக்கோவிலில் நடைபெறும் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
அதன்படி விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா 12 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழாவானது கடந்த ஏப்ரல 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 13-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இத்திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் மற்றும் சுந்தரேஸ்வரர் பலவகையான வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகின்றனர்.
இந்த பிரசித்தி பெற்ற சித்திரை தேர் திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளாக 9-ம் நாளில் நடைபெறும் அம்பாளின் திருக்கல்யாணம் மற்றும் 10-ம் நாளில் நடைபெறும் தேர் பவனித் திருவிழா உள்ளிட்டவை கருதப்படுகிறது. இதனையொட்டி இன்று நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாண வைபவத்தில் விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் திரளாக கலந்துகொண்டு திருக்கல்யாண வைபவத்தை தரிசனம் செய்தனர்.
பின்னர் சுவாமி – அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் இதில் திருமணமான பெண்கள் மீனாட்சி அம்மனை வழிபட்டு புதுத் தாலிகயிறுகளை மாற்றிக் கொண்டனர். மிகவும் விசேஷமாக கருதப்படும் இந்த திருக்கல்யாணத்தை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.