ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச சங்கத்தை சேர்ந்த மாரிமுத்து தலைமை தாங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் பா.புவிராஜ், ஏ ஐ ஐ சி டியூ சங்கத்தை சேர்ந்த சண்முகப் பெருமாள், ஏ ஐ டி யு சி முல்லன், விவசாயிகள் சங்கம் ராமலிங்கம், சிஐடியு சங்கத்தை சேர்ந்த செல்வராஜ், ராமர், சூசை ராஜ் ஆகியோர் பேசினார்.
போராட்டத்தில் தொமுச சங்கத்தைச் சேர்ந்த கனகரத்தினராஜ் , கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர், சி ஐ டி சங்கத்தைச் சேர்ந்த ஜோதி, வெங்கட்ராமன், ஏடிசி சங்கத்தின் சேர்ந்த சங்கரலிங்கம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் தொழிலாளர் விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.