வால்பாறை சாலையில் அரசு பேருந்து நள்ளிரவில் கவிழ்ந்து விபத்து 25க்கும் மேற்பட்டோர் காயம் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறைக்கு அதிகாலை திருப்பூரில் இருந்து வால்பாறைக்கு வந்த அரசு பேருந்து 71 பயனாளிகளுடன் வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் கவரக்கல் பகுதியில் மாசிதுரை சிலை அருகாமையில் வந்து கொண்டு இருக்கும் பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விபத்தில் பேருந்தில் வந்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் என்றாலும் 25க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்,108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அரசு பணியாளர்கள் விரைந்து அப்பகுதிக்கு வந்து பயணிகளை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கும் வால்பாறை சுகாதார மருத்துவமனைக்கும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் வால்பாறை சாலையில் பரபரப்பு உருவானது. அதேசமயம் அதிகாலையில் இச்செய்தி facebook மற்றும் whatsapp உள்ளிட்ட பொது தளங்களில் வெளியானதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையிலிருந்து
-பேபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts