Trending

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக புகழ்பெற்ற மதுரைக்கு அடுத்தபடியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகள் எழுந்தருளி அருள் பாலிக்கும் விசேஷமான தலமாக விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் விளங்கி வருகிறது. அவ்வாறு விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் நடக்கும் அனைத்து விழாக்களும், வைபவங்களும் இக்கோவிலிலும் நடைபெறும் என்ற சிறப்பினைக் கொண்டுள்ளது.

அதன்படி, விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழாவானது கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 13-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் மற்றும் சுந்தரேஸ்வரர் பலவகையான வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வந்தனர். இந்த பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளாக 9-ம் நாள் திருவிழாவில் நடைபெறும் மீனாட்சி அம்பாளின் திருக்கல்யாணமும், 10-ம் நாள் திருவிழாவில் நடைபெறும் திருத்தேர் பவனியும் கருதப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

10-ம் நாள் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ திருத்தேர் பவனியானது வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நன்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனைத்தொடர்ந்து பன்னிரண்டாவது நாளான காலை 9. மணியிலிருந்து பத்து மணிக்குள் விளாத்திகுளம் ஆற்றில் பாலத்திற்கு கீழ் அழகருக்கு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் செய்து ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts