அத்துமீறும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் பொதுமக்கள் கதறல் காவல் ஆய்வாளர் அறிவுரை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை அடிப்படை வசதிகள் இல்லாமல் பல வேறு சூழ்நிலையில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தனது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வால்பாறை பகுதியில் உள்ள மைக்ரோ பைனான்ஸ் மூலம் கடன் உதவி பெறுகிறார்கள் கடன் தொகையே ஒரு சிலர் செலுத்த முடியாத சூழ்நிலையில் குழுவிலுள்ள அனைவரையும் ஒரு இடத்தில் அமர வைத்து அவர்கள் அணிந்திருக்கும் நகைகள், கொலுசுகள் உள்ளிட்ட சில பொருள்களை கையகப்படுத்தி அடகு வைத்து குழுவுக்கு பணம் செலுத்துவது போன்ற வேலைகளில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒருவர் பணம் கட்ட வில்லை என்றாலும் ஒட்டுமொத்த குழுவில் உள்ளவர்களை அவர்கள் பணத்தை போட்டு கட்ட சொல்வது வங்கிக் கணக்குகளை முடக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அடித்தட்டு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து வால்பாறை காவல் ஆய்வாளர் அவர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மனு கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகையில்;
மனுவை ஏற்று அனைத்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளை அழைத்து இனியும் அடித்தட்டு மக்கள் சிரமப்படும் வண்ணம் வசூல் செய்யக்கூடாது அப்படி ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் அனைத்துக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டும் பணம் செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் மாலை 6 மணிக்கு மேல் கடன் வசூல் செய்யக்கூடாது காலை நேரத்தில் வேலைக்குப் போகும் போது அவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது மைக்ரோ பைனான்ஸ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பணம் வசூல் செய்வதை அதிக தொந்தரவு செய்யக்கூடாது போன்ற பல வேறு அறிவுரைகளை வழங்கினார் உண்மையிலே அடிதட்டு மக்களே பாதுகாப்பது வால்பாறை காவல் ஆய்வாளர் அவர்கள் உடனடியாக செயல்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கியதற்கு வால்பாறை பகுதியில் இருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாகவும் எங்கள் கட்சியின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் இனிமேல் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் அடித்தட்டு மக்களிடம் எவ்வாறு வசூல் செய்கிறார்கள் என்பதை நாமும் பொருத்திருந்து பார்ப்போம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts