புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் காற்று மாசுபாடு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், காற்று மாசுபாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து கலந்துரையாடல் மற்றும் காற்று மாசுபாட்டினை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதம் 6 ,7, 8 வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாணவர்கள் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் தீமைகள் அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றை கலந்துரையாடினார்கள். இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். போட்டிகளை கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை ஏற்பாடு செய்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா பேசும்பொழுது மாண்புமிகு பள்ளிகளுக்கதுறை அமைச்சர் 2025 -26 ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது வாசிப்பு இயக்கம் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் வாசிக்கும் விதத்தில் கதை சொல்லும் அமர்வுகள், புத்தகக் கழகங்கள், வாசிப்பு சவால்கள் ஆகியவற்றின் மூலம் அறிவு தேடல் மற்றும் கரும்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும் இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் தேசத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், பிடித்த விளையாட்டுக்கள், சுற்றுச்சூழல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் முதலியவற்றில் பேச்சுப்போட்டி ,கதை சொல்லுதல் நடித்துக் காட்டுதல் குழு விவாதம் மற்றும் பட்டிமன்றம் ஆகியவற்றின் மூலம் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்று பேசினார். வாசிப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு புத்தகம் வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியை சிந்தியா நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.