கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொடர்ந்து யானைகளின் அட்டகாசம் தொடர் கதையாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் சோலையார் டேம் பகுதியில் ஒரு அம்மாவை யானை தாக்கி உயிரிழந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் தற்பொழுதும் அதே பகுதியில் பொதுமக்கள் இரவு நேரங்களில் அச்சுறுத்துகிறது வனவிலங்குகள் வரும் பொழுது பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பது வனத்துறையின் இன்றியமையாத கடமையாகும். இவை அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.
வால்பாறை நகராட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைக்காக பல கோடி ரூபாய் செலவு செய்கிறோம் என்று நகராட்சி நிர்வாகம் விளம்பரப் படுத்துகிறார்கள் சாதாரண அடித்தட்டு மக்கள் குடியிருக்கும் பகுதியில் தெருவிளக்கு இல்லை என்பது வேதனைக்குரியது.
ஆனால் வனவிலங்கு தாக்கும் பொழுது வனத்துறை ஊழியர்கள் எவரும் இல்லாமல் இருப்பது வேதனையாகிறது என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பி.ஜே.பி பிரமுகர் கடந்த வாரம் யானை தாக்கி உயிரிழந்த அம்மாவை வந்து உடலை பார்த்தார்கள் ஆறுதல் கூறினார்கள் இனிமேல் ஏதும் நடக்காது. நாங்கள் வனவிலங்கு வந்தால் உரிய பாதுகாப்பு கொடுப்போம் தெருவிளக்கு அமைச்சு தருவோம்
அனைத்தும் செய்து தருகிறோம் என்று உறுதி அளித்தார்கள் ஆனால் இன்று வரை எந்த அதிகாரியோ எந்த ஊழியரோ இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் சிரமமாக உள்ளது.
இந்நிலையில் யானை வந்து தாக்கி தேசமடைந்த வீட்டின் உரிமையாளர் கூறுகையில் நேற்று இரவு எனது வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியது என்ன செய்வது என்று தெரியாமல் உயிர் தப்பினும் இனியாவது மக்களை பாதுகாக்க கூடிய ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் எங்களைப் போன்ற அடித்தட்டு மக்களை பாதுகாத்துக் கொடுங்கள். தெருவிளக்கு அமைத்துக் கொடுங்கள் வனவிலங்கு வந்தால் வன விலங்கிலிருந்து எங்களை பாதுகாத்துக் கொடுங்கள் தயவுசெய்து வனவிலங்கு தாக்குதல் ஏற்பட்ட பிறகு செய்தித்தாள்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பதிவிடுவதற்காக புகைப்படங்களை எடுப்பதற்காக வராதீர்கள் எங்களின் அடிப்படைத் தேவைகளை எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற தேவைகளே செய்து கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
நாம் தொடர்பாக ஆய்வு செய்தோம் உண்மையிலே 100% வனவிலங்கும் மனித மோதலும் ஏற்படும் பொழுதும் அதற்கு முன்னதாகவும் உரிய பாதுகாப்பு அளிப்பதில்லை எல்லாம் முடிந்த பிறகு சமூக வலைத்தளங்களிலும் செய்தித்தாள்களிலும் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்வதற்காக புகைப்படங்களை எடுப்பதற்காக வருகிறார்கள் கடந்த சுமார் பத்து நாட்களுக்கு மேலாகவே ஒற்றை யானை அப்பகுதியை அச்சுறுத்துகிறது அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்வதை செய்தித்தாள்களில் ஊடகங்களில் பார்க்கும் பொழுது அனைத்து தரப்பு மக்களும் உண்மையாலுமே இவர்கள் உதவுகிறார்கள் என்று தெரியும் ஆனால் எல்லாம் ஒரு மாய பிம்பம் தான் இனிமேலாவது தயவு செய்து மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆட்சியாளர்களும் அரசும் முன் வரவேண்டும் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-P.பரமசிவம்.