கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு அருகே அமைந்துள்ள சின்னக்கானல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அரசு நிலமானது சில ஆண்டுகளுக்கு முன்பு 12 நபர்களால் போலியாக பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு அரசு நிலத்தை சொந்தமாக்கிக் கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நில அளவையின் போது அந்நிலங்கள் அதாவது சின்னகானல் 70 ஏக்கர் சாலையில் சர்வே நம்பர் 526 முதல் 529 வரை அனைத்தும் 9 ஏக்கர் 70சென்ட் நிலமும் சேர்த்து ஆக்கிரமிக்கப்பட்டதை கண்டுபிடித்து உள்ளது. உடனடியாக சின்னக்கணல் பஞ்சாயத்தின் மூலமாக நடவடிக்கை எடுத்ததின் பெயரில் நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள் அனைவரும் அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
தற்பொழுது வழக்கு நடைபெற்று முடிந்த நிலையில் நீதிமன்றம் கூறியதாவது; கையகப்படுத்தப்பட்ட அரசு நிலத்தை போலிச் சான்றிதழ் மூலமாக வள்ளியம்மாள் என்கிற பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மற்றும் வேறு இடங்களில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து நிலத்தை அரசு ஏற்றெடுக்க சம்பத்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்ததின் பேரில் நிலமானது சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் சோனியா எலிசபெத், ராணி தங்கச்சன், பேபி சக்கரியா, பிரமோத் ஜோசப், கிரேஸ் தோமஸ், தோமஸ் மாத்யூ, ஜோசப் ஜோசப் மற்றும் சி பி எம் சார்ந்த சாந்தம்பாரை எரியா கமிட்டி மெம்பர் V.X ஆல்வி கையக படுத்தி வைத்திருந்த சுமார் 2ஏக்கர் 80சென்ட் நிலமும் சேர்த்து சுமார் 12 நபர்களிடம் இருந்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுக்கொண்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்,
மூணாறு.