கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட் பகுதியில் இன்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ரூஸ்லீ என்பவரை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.