கேரள மாநிலம் பாலக்காடு விவசாய பால் உற்பத்தியாளர்களுக்கு அத்யாவசிய பொருட்களின் விளக்கேற்ப பால் விலை இல்லை இதனால் நஷ்டமும் மன உளைச்சலும் இருப்பதாக கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இதுகுறித்து கேரள மாநிலத்தின் விவசாயி பால் உற்பத்தியாளர்கள் ஜூன் 17 அன்று எம் டி எஃப் ஏ சங்கத்தின் வாயிலாக பால் 1 லிட்டருக்கு 60 ரூபாய் என்று நிர்ணயம் செய்ய வேண்டும், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் டாக்டர்களை நியமிக்க வேண்டும், பென்ஷன் மாதம் 3000 ரூபாய் வழங்க வேண்டும், விலைவாசி ( பெட்ரோல் டீசல் ) உயர்வை பொறுத்து பால் விலையை உயர்த்தி தர வேண்டும்.
மேலும் பால் பண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக நல்ல தரமான கன்றுக்குட்டிகளை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கோழிக்கோடு ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாய பால் உற்பத்தியாளர்கள் மழையையும் பொறுப்பெடுத்தாமல்
தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒருமித்த கருத்தோடு அணி திரண்டு அமைதியான முறையில் நடைப்பயணம் மேற்கொண்டு தங்கள் கோரிக்கையை கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முன்வைத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் அப்போது தான் பால் உற்பத்தியை நிலைநிறுத்த முடியும் என்பது ஒட்டுமொத்த விவசாய பால் உற்பத்தியாளர்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.