கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை அரசு மருத்துவமனையில் 2024 வரை பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழில் ஏற்படும் பிழைகளை சரி செய்ய முடியாமல்
பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் அதே சமயம் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வால்பாறை P. பரமசிவம் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார். மனுவில் மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை மாவட்டம் முழுவதும் 2019 முதல் 2023 வரை பிறந்த குழந்தைகளின் பெயர்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய முடியாமல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாமல் பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் வேதனைப்படுகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் உள்ள பிறப்பு இறப்பு பதிவு அலுவலர்கள் குழந்தைகளின் பெயரில் உள்ள பிழைகள் திருத்தங்கள் செய்ய மறுத்து விடுகிறார்கள்.
குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு பிறப்புச்சான்றிதழ் மிகவும் அவசியமாகும். இதனால் பல குழந்தைகள் பள்ளியில் சேர்க்க முடியாமல் பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குழந்தைகளின் பிறப்பு பதிவு மின்னணு முறையில் 2018 முதல் 2023 வரை குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் உள்ள குறைகளை செய்து தருவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிடுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்டத்திலுள்ள பிறப்பு இறப்பு அலுவலர்களிடம் 2024-2025 வருடங்களில் பிறக்கும் குழந்தைகளின் பெயர் திருத்தங்கள் மட்டுமே சரிசெய்து தருகிறார்கள் என்பதும் தாங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மாவட்டத்திலுள்ள அனைத்து பிறப்பு இறப்பு பதிவு அலுவலகங்களுக்கும் 2019 முதல் 2023 வரை குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் உள்ள குறைகளை சரி செய்து தருவதற்கு உதவுமாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த மனுவை காலதாமதம் செய்யாமல் பரிசீலனை செய்து
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.