கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கக்கூடிய மருந்துப் பொருட்களை வீணாக்கி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகுகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு வழங்கக்கூடிய மருந்துப் பொருட்கள் உடைத்து சிதறி கொட்டி கிடைக்கின்றது. இது சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது மருத்துவ அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் புலம்பல் இணையதளங்களிலும் whatsapp தளங்களிலும் பரவி வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை அரசு சுகாதார நிலையத்தில் இது போல் பல மருந்துப் பொருட்கள் வீணாக்கப்படுகின்றது. ஒரு காலத்தில் அரசு மருத்துவமனையை விட அதிக எண்ணிக்கையில் மகப்பேறு நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகில் உள்ளது என்பதால் சில பொது மருத்துவமும் நடைபெற்றது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நோயாளிகளின் வருகை குறைவு தான் ஆனால் அதிக நோயாளிகள் வருவது போல் கணக்கு மட்டும் பராமரித்து வருகின்றனர். இதற்கு என்ன ஆதாரம் என்பவர்கள் அங்கு உள்ள நோயாளி பதிவேடையும் சிசிடிவி காட்சிகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதற்கும் மருந்திற்கும் என்ன சம்பந்தம் என கேட்பவர்களுக்கு. நோயாளிகள் இருந்தால் தானே மருந்தின் அளவு முக்கியம். நோயாளிகள் அதிகமாக காண்பித்து அதிகமாக இருக்கும் மருந்தை குப்பையிலும் ஆற்றிலும் தூக்கி வீசுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
5 ரூபாய் ஊசி முதல் சில பரிசோதனைகளுக்கு பயன்படும் ஆயிரக்கணக்கான விலையுள்ள சோதனைப் பொருட்களும் இதில் அடங்கும். அரசு மருத்துவமனையை நோக்கி படையெடுக்கும் அரசியல்வாதிகள் கண்ணில் இவை இதுவரை படாதது எப்படி? அல்லது வால்பாறையில் உள்ள அரசியல்வாதிகள் இந்த சுகாதார நிலையத்தில் இருந்து ஏதும் லாபம் கிடைப்பதால் இதை கண்டுகொள்வது இல்லையா… என்றவாறு இவ்வழியாக செல்லும் பொது மக்கள் புலம்பல்…. இனியாவது இங்கு ஒரு மருத்துவமனை இருப்பது அனைவரின் கண்ணிலும் படுமா என கேள்வி…
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.