கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறையில் சிறுமியை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் வால்பாறை நகரம் சார்பாக பச்சைமலை காளியம்மன் கோவில் பகுதியில் சிறுத்தைப்புலி தாக்குதலுக்குள்ளனான ரோகினி என்ற சிறுமியின் குடும்பத்தினரை இன்று சந்தித்து ஆறுதல் கூறி சிறிய உதவித்தொகையும் வழங்கினர்.
நிகழ்வில் நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ் நகர இனைச்செயலாளர் செய்யது அலி மற்றும் த.வெ.க நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து த.வெ. காவினர் கூறுகையில் இதுபோன்ற நிகழ்வு இனிமேல் நடைபெறக்கூடாது அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை அவசர கால நடவடிக்கையாக எடுத்துக்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து தர வேண்டும் என தமிழக அரசையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
-M.சுரேஷ்குமார்.