விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு சமையல் உதவியாளர் நியமனம் நேர்காணல் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள சத்துணவு சமையல் உதவியாளர் காலியாக உள்ள 7 சத்துணவு மையங்களுக்கு புனித பீட்டர் நடுநிலைப்பள்ளி வேம்பார் புனித லூயிஸ்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேல்நிலைப்பள்ளி கீழ வைப்பார்
அரசு மேல்நிலைப்பள்ளி வேம்பார்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நெடுங்குளம்
ஆர்.சி. நடுநிலைப்பள்ளி சிப்பிக்குளம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேல்மாந்தை
டி.டி.டி.எ. நடுநிலைப்பள்ளி விளாத்திகுளம்
மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியம் 1 சத்துணவு மையத்திற்கும் சத்துணவு சமையல் உதவியாளர் நியமனம் செய்ய நேர்காணல் இன்று (27.6.2025) பத்து மணி முதல் நடைபெற்றது.

இந்த நேர்காணலில் 31 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு நேர்காணல் நடத்திய
தேர்வு குழு தலைவராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர் சத்துணவு
(மு.கூ.பொ.) திருமதி.ச.பெர்பச்சுவல் பா.ரோஸிட்டா. அவர்களும் தேர்வு குழு உறுப்பினர்களாக விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் (வட்டார ஊராட்சி) த.ரஞ்சித், அவர்களும் மற்றும் விளாத்திகுளம் வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி k. விமலா ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார ஊராட்சி அலுவலர்கள் திரு.மு. பெரியசாமி திரு.மு. பெரியதுரை, ராஜ பூபதி பாலசுப்பிரமணியன் உதவியாளர்கள் ரகுராம சக்கையா ராமநாதன் ராமச்சந்திரன்
வீரநல்லம்மாள் இளநிலை உதவியாளர் அஜித்குமார் மற்றும் ஒன்றிய அலுவலக பணியாளர்களும் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts