அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது!!

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு ஒவியப்போட்டி, விழிப்புணர்வு பேரணி, களப்பயணம் , பசுமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா சுற்றுச்சூழல் தினம் குறித்து பேசும்பொழுது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் நாம் அனைவரும் பூமியை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரின் பங்கும் மிக முக்கியமானது. பூமியை பாதுகாக்க நம்மால் இயன்றளவு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். கடைகளுக்கு செல்லும் பொழுது துணி பையை எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு மாணவரும் சுற்றுச்சூழல் குறித்து அறிந்து கொண்டு அதன்படி தங்களுடைய இல்லங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று பேசினார் ‌‌சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக சூழலியல் சார்ந்து விழிப்புணர்வு பேரணி அக்கச்சிப்பட்டி பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், அனைவரும் மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வு, சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரது கடமை, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி மூலம் எடுத்துக் கூறப்பட்டது.அதனை தொடர்ந்து மாணவர்களுக்கான ஓவிய போட்டி பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம் என்ற தலைப்பில் நடைபெற்றது. ஓவிய போட்டியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஓவியங்களாக வரைந்தனர். மரக்கன்றுகள் நடுதல் ஒவ்வொரு மாணவரும் தங்களுடைய பிறந்த தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்று நடுதல் வேண்டும் ஏற்கனவே மரக்கன்று நட்டு இருந்தால் அதை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. பசுமை உறுதிமொழி அனைத்து மாணவர்களும் எடுத்துக்கொண்டனர். பள்ளி வளாகத்தில் இருந்து அக்கச்சிப்பட்டி கிராமப் பகுதியில் உள்ள விவசாய நிலம் பகுதிகளுக்கு களப்பயணம் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் உதவியுடன் மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் அனைவரும் இயற்கையில் கிடைக்கக்கூடிய தாவரங்கள் அதனால் ஏற்படக்கூடிய பயன்கள் இயற்கை விவசாயம் முறைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர். மாணவர்களுக்கு மருத்துவ குணம் மிக்க தாவரங்களின் பண்புகளையும் தெரிந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், வெள்ளைச்சாமி, ஜெம்ம ராகினி சகாய ஹில்டா, செல்வி ஜாய்,கணினி ஆய்வக உதவியாளர் தையல் நாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts