கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் தெரு விளக்கு சரியாக எரிவது இல்லை அதே சமயம் ஆபத்தான இடங்களில் தெரு விளக்கு இல்லை சுத்தமான சுகாதாரமான குடிநீர், சாலை வசதியும் இல்லாமல் அடித்தட்டு அப்பாவி, பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்பொழுது கடும் மழை காற்று வீசுகிறது, வனவிலங்கு தொல்லையும் அதிகம் உள்ளது. இந்த மாதிரி சூழ்நிலையில் நிரந்தர தீர்வு ஏற்பட யாரிடம் புகார் தெரிவிப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் மிகவும் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும். கடந்த காலங்களில் தெரு விளக்குகள் பராமரிப்பது புதிய இடங்களுக்கு தெரு விளக்கு அமைப்பது போன்றவை அனைத்தும் வால்பாறை நகராட்சியால் பராமரிக்கப்பட்டது. அப்பொழுது சொன்னவுடன் செய்து தருவார்கள். தற்பொழுது தனியார் நிறுவனம் ஒப்பந்தங்கள் விடப்பட்டுள்ளது.
அவர்களை பார்ப்பதும் அவரிடம் குறைகளை சொல்வதும் கேள்விக்குறியாக உள்ளது. ஒப்பந்தம் எடுத்தவர்கள் தினந்தோறும் பொதுமக்களே சந்தித்த தெரு விளக்குகளை சரி செய்து கொடுத்த மாதிரி ஆவணங்களை சரி செய்து வைத்துக் கொள்வார்கள். தனியார் நிறுவனத்தில் தெருவிளக்கு பராமரிப்பது புதிய தெரு விளக்கு அமைப்பது சுத்தமான சுகாதாரமான குடிநீர் சாலை வசதி வேண்டும். இந்த குறைகளை நகர மன்ற உறுப்பினர், மக்கள் பிரதிநிதி, அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரிடமும் குறைகளை எடுத்துச் சொன்னால் நாங்கள் கூறிவிட்டோம். உடனே வந்து பார்த்து விடுவார்கள் என்று சொல்லி நழுவி விடுவார்கள்.
இவர்கள்தான் தெரு விளக்கு பராமரிப்பது புதிதாக போடுவது அனைத்தும் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டனர். இதனால் இவர்கள் தனியார் நிறுவனத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. காரணம் தனியார் நிறுவனம் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் மிக முக்கிய பங்குதாரர் அவர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்கள் நலனை கருத்தில் கொண்டு அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது அரசியல்வாதியை விட அரசின் நம்பிக்கை நட்சத்திரமாக விளக்கும் அரசு அதிகாரிகளின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இதை கருத்தில் கொண்டு தமிழக தலைமைச் செயலாளர்கள் இவர்கள் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு எஸ்டேட் பகுதிகளிலும், வால்பாறை பகுதிகளிலும் அரசு மூலம் அப்பாவி மக்கள் பயன்படும் குடிநீர்,சாலை ,தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் அதிகாரிகளின் முகவரியும், தொலைபேசி எண்கள் மற்றும் புகார் பெட்டிகள் வைத்து இப்பகுதியில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாக்க வேண்டும்.
தமிழக தலைமை செயலாளர் அவர்களே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர் நாமும் இது தொடர்பாக ஆய்வு செய்தது 100 சதவீதம் உண்மை வனவிலங்கு மனிதர்கள் மோதலும் ஏற்படும் பொழுது உயிர் இறப்பும் ஏற்பட்டுள்ளது பல பகுதிகளில் தெருவிளக்கு எரிவதில்லை, தேவையான இடங்களில் தெரு விளக்கு இல்லை, சுத்தமான சுகாதாரமான குடிநீர், சாலை வசதியும் கிடையாது, பலவேறு சூழ்நிலையில் அடித்தட்டு மக்கள், அப்பாவி மக்கள், சிரமப்படுகின்றன. இதன் மூலமாக கஷ்டப்படும் மக்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ் குமார்.