கோவை மாவட்டம் வால்பாறையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் சாமானிய மக்கள் வேதனைப்படுகின்றன.வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை தேவையான இடங்களில் தெருவிளக்கு இல்லை, உயிர் காக்க மருத்துவமனைக்கு போவதற்கு கூட சாலை வசதிகளும் கிடையாது, எஸ்டேட்டில் குடியிருப்பு பகுதிகளில் மரம் செடிகள் மலர்ந்து புதர்கள் ஆகும் உள்ளதால் ஒரு சில நேரங்களில் வனவிலங்கு தாக்குதலால் உயிர் இழப்பும் ஏற்படுகிறது, சுத்தமான குடிநீர் வசதியும் கிடையாது, இன்னும் பலவேறு பிரச்சனைகளால் தேயிலைச் செடிகளுக்கு உரமாகிறார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன் என்று கூட்டமாக தனது உடன்பிறப்போடு ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி விடுகிறார்கள் என்று வால்பாறை நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தனியார் துறையிடம் தெரு விளக்குகளை பராமரிப்புக்கு விடப்பட்டதால் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் சாமானிய மக்கள் சிரமப்படுகின்றன இதைப்பற்றி மக்கள் பிரதிநிதியிடம் கூறினால் நான் அவரிடம் கூறிவிட்டேன் உடனே வந்து செய்து தருவார்கள் என்று சொல்லி நழுவி விடுகிறார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசியல்வாதி விட அடித்தட்டு மக்களே பாதுகாக்க கூடியது ஆட்சியாளர்களின் பொறுப்பு என்பதையும் தாங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
தமிழக தலைமை செயலாளர் அவர்கள் இப்பகுதியில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒவ்வொரு எஸ்டேட் வாரியாகவும், வால்பாறை பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை யாரிடமும் புகார் கூறாமல் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தாங்கள் குறைகளை தெரிவித்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் தொலைபேசி எண்கள், புகார் பெட்டிகளை வைக்க வேண்டும் என்று மனுவில் மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக நாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி பரமசிவம் இடம் கேட்கும் பொழுது அவர் கூறுகையில் தேர்தல் நேரத்தில் மட்டும் கூட்டம் கூட்டமாக வந்து உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களின் ஒருவனாக எப்பொழுதும் பிரச்சனை என்றால் ஓடி வருவேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி பணத்தை கொடுத்து எழுதி வாக்குகளை பெற்று விடுகிறார்கள்.
இன்று சாமானிய மக்கள் அடித்தட்டு மக்கள் படும் துயரங்களை கண்டு கொள்ளாமல் தனது வாழ்வாதாரத்திற்கு என்னென்ன தேவை என்பதை பூர்த்தி செய்வதற்கு தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செயல்படுகிறார்கள். இவர்கள் இதற்காகத்தான் மக்கள் பிரதிநிதியாக வருகிறார்கள். அடித்தட்டு மக்களையும் பாதுகாப்பது ஆட்சியாளரின் மிக முக்கியமாக பங்காகும். அடிப்படைத் தேவைகளை வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒவ்வொரு எஸ்டேட் பகுதிகளிலும்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை பகுதிகளிலும் மக்களின் அடிப்படை தேவைக்கான சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், மற்றும் புகார் பெட்டிகளை வைத்து மக்கள் கோரிக்கைகளை தெரிந்து ஆட்சியாளர்கள் செய்து தர வேண்டும் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பொதுநலத்துடன் கேட்டுக்கொள்கிறேன் நமது நோக்கம் சாமானிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது என்று குறிப்பிட்டுள்ளார். நாமும் பொறுத்திருந்து பார்ப்போம். அரசு அதிகாரிகள் மக்களின் குறைகளை தீர்ப்பார்களா? அரசியல்வாதி மாதிரி இவரும் நழுவி விடுவார்களா?
-M.சுரேஷ்குமார்