கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை!!

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கந்தர்வக்கோட்டை ஜீன் 03
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஆ. மணிகண்டன் தலைமையில் திராவிட முன்னேற்ற கழக கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் திரு மா.தமிழய்யா அவர்களின் முன்னிலையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு செய்த பல்வேறு சாதனைகள் குறித்தும், கடந்த ஆட்சி காலத்தில் தொகுப்பூதியத்தை ஒழித்து காலமுறை ஊதியம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நினைவு கூறுகிறோம். இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளர் முத்துக்குமார், மாநில செய்தி தொடர்பாளர் ரகமத்துல்லா, கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், வட்டாரச் செயலாளர் ரவி, வட்டாரப் பொருளாளர் பழனிச்சாமி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவர் தெய்வீகன், துணைச் செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் செல்வகுமார் , ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts