கோவை மாவட்டம் பொள்ளாச்சி மனநல காப்பகத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் பணம் நகை கையாடல் செய்த உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொள்ளாச்சி முல்லை நகரில் செயல்பட்ட மனநலக் காப்பகத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த காப்பக நிர்வாகிகளை திருவனந்தபுரத்தில் மகாலிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18.5 சவரன் தங்க நகைகளும், 1.5 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதை அடுத்து, உயர் அதிகாரிகள் விசாரணை செய்ததில் கையாடல் உறுதி செய்யப்பட்டது. சனிக்கிழமை மாலை உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.