கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் நன்றிகள்!!

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4% சதவீத இட ஒதுக்கீடை அமல்படுத்த அரசாணை வெளியிட்டு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா நன்றி தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசாணை வெளியிட்டு எங்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்

கடந்த 2006-2011 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சியில் தமிழ்நாட்டில் ஊனமுற்றோர் அலுவலகம் என்பதை மாற்றுத்திறனாளி அலுவலகம் என்பதை மாற்றி மாற்று திறனாளிகளுக்கு என்று தனியாக ஒரு துறையை உருவாக்கி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தன்னுடைய நேரடி பார்வையில் வைத்திருந்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு, போக்குவரத்தில் 75 சதவீதம் மானியம், உதவித்தொகை இரு மடங்கு உயர்வு, உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை
திராவிட முன்னேற்றக் கழக பொற்கால ஆட்சியில் தான் செயல்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூறுகிறோம்.

கலைஞர் வழியில் சமூக நீதி ஆட்சி நடத்தும் திராவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மாற்றுத்திறனாளி நலத்துறையை தன்னுடைய நேரடி பார்வையில் வைத்துள்ளார்.

இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சட்ட மசோதாவை நிறைவேற்றி மாற்றுத்திறனாளிகளும் அரசியல் அதிகாரம் பெறுவதற்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு 60க்கும் மேற்பட்ட அரசாணைகளை வெளியிட்டு ஒவ்வொரு பிரிவிலும் உள்ள மாற்றுத்திறனாளி ஏற்றம் பெற்று வருகின்றனர். பராமரிப்பு உதவி தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, நவீன வசதியுடன் நான்கு சக்கர வாகனமும் வழங்கப்பட்டு ஒவ்வொரு மாற்றத்தினாளிகள் வாழ்விலும் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகள் உயர்கல்வி பயிலும் வகையில் திராவிட மாடல் ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் உதவித்தொகை, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரு மடங்கு உயர்வு, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கலைஞர் வழியில் வழங்கி பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார்.

தொடர்ந்து பொற்கால ஆட்சி நடத்திவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசாணை வெளியிட்டு எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். பதவி உயர்வு நான்கு சதவீத அரசாணை மூலம் பல்லாயிரம் கணக்கான மாற்றுத்திறனாளிகள் பதவி உயர்வு பெறுவார்கள். மாற்றுத்திறனாளிகளை உயர் பதவிகளில் அமர்த்தி அழகு பார்க்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் மற்றும் உயர் அலுவலர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts