கோவை மாவட்டம் வால்பாறை நேற்று சிறுத்தை கவ்வி சென்ற 4 வயது சிறுமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிறுமியின் உடை மட்டுமே கிடைத்ததாக கூறப்பட்ட நிலையில் வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து ட்ரோன் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று சிறுமியை வனப்பகுதியில் இருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் உயிரிழந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.