சூறாவளி காற்றுடன் கூடிய மழை வாகன ஓட்டுனர்கள் சிரமம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் தென்மேற்கு பருவக்காற்றுடன் கூடிய மழைபெய்து கொண்டிருக்கிறது வால்பாறை அடுத்துள்ள சேடல் டேம், குரங்கு முடி செல்லும் சாலை, ஐயர் பாடி செல்லும் சாலை, வாட்டர் பால், கவர்க்கல், இடச்சோலை மற்றும் பழைய வால்பாறை சாலை ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுகின்றன, ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்படுகிறது. இதனால் மகன ஓட்டுனர்கள் சீரமத்துக்குள்ளாகும் நிலைமை உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சோலையார் டேம் 143 கனவினாடி தண்ணீர் நிரம்பியது. இதனை கருத்தில் கொண்டு வால்பாறை சாலை அமைப்பு அதிகாரிகள் மற்றும் சாலை அமைப்பு ஆய்வாளர்கள் சோலையார் டேம், நீரார் டேம், சின்ன கல்லாறு அணை, கூலாங்கல் ஆறு, சேடல் டேம் ஆற்றுப்பகுதி, குரங்க முடி ஆற்றுப்பகுதி நடுமலை ஆறு, நல்ல காத்து ஆறு, சோலையார் ஆற்றுப்பகுதி இது போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்வதை தடுக்க வேண்டும்.

ஏதேனும் விபத்துக்கள் ஏற்படும் முன்னே அதிகாரிகள் அப்பகுதியில் செல்ல தடை விதிக்க வேண்டும். மீறி செல்பவர்களை தடுத்து அபராதங்கள் விதித்தால் அப்பகுதிகளில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்கலாம் என வாகன ஓட்டுனர்கள் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-பேபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts