திருப்பூர் இடுவாய் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்ற கோரிக்கை..!!

நேற்று (02/07/2025) மாலை 4 மணியளவில் திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் இடுவாயில் உள்ள அரசின் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசுக்கு செலுத்த வேண்டிய பொதுமக்களின் பங்குத்தொகை ரூபாய் இரண்டு லட்சம் செலுத்தப் பட்டது.
இடுவாய் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களும் காலையிலிருந்து இதற்கு நேரத்தை ஒதுக்கி உரிய முறையில் டெபாசிட் தொகையை செலுத்துவதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் சிரமம் பாராமல் செய்து தந்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அவர்களை இரு தலைமை ஆசிரியர்களோடு,இடுவாய் ஊராட்சி முன்னாள் தலைவர் திரு.K. கணேசன்-அவர்கள்,வழக்கறிஞர் திரு.சுப்பிரமணி-அவர்கள் முன்னாள் துணை தலைவர் திரு.பரமசிவம்-அவர்கள்,முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு.இளங்கோ-அவர்கள், நாட்டாமை குமாரசாமி-அவர்கள்,அ.ப.பாலசுப்பிரமணி-அவர்கள், மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களோடு நேரில் சந்தித்து இரண்டு லட்சம் ரூபாய் பொதுமக்கள் பங்குத்தொகை கட்டியதற்கான ஆவணங்களை அவரிடம் தந்து மேல்நிலைப்பள்ளி விரைவில் அமைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்ட து.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் விரைவில் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாகவும், வந்திருக்கக்கூடிய அனைவருடைய முழு ஒத்துழைப்பும் எங்களுக்கு தேவை எனவும், பொதுப் பிரச்சினைக்கு அனைவரும் இணைந்து வந்தது மிக்க மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.

அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

திருப்பூர்

-பாஷா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts