கோவை மாவட்டம் பொள்ளாச்சி தனியார் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வடுகபாளையத்தைச் சேர்ந்த மாணவி அஸ்விதாவை (19) கத்தியால் குத்திவிட்டு இளைஞர் பிரவீன் குமார் தப்பியோடினார். அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியோடு ஹாஸ்பிடல் கொண்டு செல்லும் வழியில் மாணவி அஸ்விதா பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த உறவினர்கள், அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே பிரவீன் குமார் போலீசில் சரணடைந்துள்ளார்.
எதற்காக கொலை செய்தார் என்கிற விவரம் காவல்துறையின் விசாரணையில் தெரியவரும். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.