தஞ்சாவூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் எதிர்வரும் 03.05.25, சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஒரு நாள் பல்லுயிர் பாதுகாப்பு கருத்தரங்கம் தஞ்சாவூர் மாதாகோட்டை சாலை SPCA வளாகம் அருகில் உள்ள GKS அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. பா. பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப அவர்களும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளர் டாக்டர். என். சுப்பையன் இ.ஆ.ப அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைக்க உள்ளார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இக்கருத்தரங்கில் விலங்கு நல ஆர்வலர்கள் டாக்டர். அப்பு பிள்ளை முருகன் கோவா, திருமதி. சாலி வர்மா, திருச்சூர், திருமதி. பிராப்தி பஜாஜ், புது தில்லி, டாக்டர். நம்பி, சென்னை, டாக்டர். மினி வாசுதேவன், கோயம்புத்தூர், டாக்டர். சேகர், சென்னை மற்றும் டாக்டர் ஜெயகிருஷ்ணன், மதுரை ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிரஉள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த தன்னார்வ அமைப்பினர் தாங்கள் மேற்கொண்டு வரும் விலங்கு நல பணிகள் குறித்தும் தங்கள் பங்களிப்பையும் விளக்க உள்ளனர்.
தமிழ்நாடு வனத்துறை மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விலங்குகளை கையாளும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க உள்ளனர்.
இக்கருத்தரங்கில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://spcathanjavur.org/awc2025/participants-registration/ என்ற இணைய முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு 7418364555 / 9489129765 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்
இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர். பாஸ்கர் மற்றும் கருத்தரங்க செயலாளர் டாக்டர். ஏஞ்சலா சொர்ணமதி மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாலமுருகன் தஞ்சாவூர்