பொள்ளாச்சி மின்னல் அலையன்ஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மின்னல் அலையன்ஸ் சங்கம் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் அமைந்துள்ள மின்னல் மஹாலில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அலையன்ஸ் இயக்கத்தின் பன்னாட்டு இயக்குனர் மகேஷ் குமார் அவர்கள் புதிய நிர்வாகிகளான தலைவர் செல்வமணிகண்டன், செயலாளர் அருண் கிருஷ்ணன், செயலாளர் அமுத சேகரன், பொருளாளர் ராமமூர்த்தி, மக்கள் தொடர்பு அலுவலராக முனைவர்.அபு. இக்பால் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

262S சாசன மாவட்ட ஆளுநர் மின்னல் ஸ்ரீனிவாசன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
மாவட்ட ஆளுநர் காளியப்பன் துணை ஆளுநர்கள் அரங்கநாதன், அருண்குமார், ஸ்வீட் முருகானந்தம் மற்றும் கூட்டுமாவட்ட இணை செயலாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சிறப்பு விருந்தினர்களாக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி.V ஜெயராமன் அவர்களும், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்களும், முன்னாள் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் கிருஷ்ணகுமார் அவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை மாவட்ட பொறுப்பாளர்கள் மகேஸ்வரன், கேசவன் மற்றும் பொள்ளாச்சி மின்னல் அலையன்ஸ் உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பிற அலையன்ஸ் சங்க நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

நிகழ்ச்சியில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் நோயாளிகள் அமருவதற்கான காத்திருக்கும் அறை மட்டும் இருக்கைகள் விரைவில் அமைத்து தரப்படும் என்று தலைவர் செல்வமணிகண்டன் அவர்கள் தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts