கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான சுற்றுலா தலமான மூணார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து சுற்றுலா பகுதிகளை பார்த்து ரசித்து செல்ல வேண்டும் என்று நினைத்தபோதிலும் வாகன நெரிசலினால் சரியான நேரத்தில் வந்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் முழு மகிழ்ச்சியோடு செல்வதில்லை. அது மட்டும் அல்ல மூணாறில் உள்ள சாலைகளும் 3 அட்டவணையில் உள்ள பாலம் குறுகியதாக அமைந்துள்ளதாலும் சற்று நேரத்திலேயே வாகன நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே தற்போது மூணார் பகுதியில் பாலம் கட்டப்பட்டு சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும் அமைச்சர் பாலகோபால் கூறியுள்ளார். நேற்று தேவிகுளம் எம்எல்ஏ வழக்கறிஞர் ராஜா மற்றும் அமைச்சர் பாலகுமார் அனைவரும் பார்வையிட்டனர். செய்தியாளர் சந்திப்பில் மூணாறு பகுதியில் பாலம் கட்டப்படும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்,
மூணாறு