தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள யோகிராம்சுரத்குமார் நாம கேந்திரத்தில்
அருள்மிகு ஸ்ரீ விசிறி விநாயகர் மற்றும் பகவான் யோகிராம்சுரத்குமார் நூதன விக்ரஹ
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவானது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன்படி காலை 7:00 மணி அளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய மகா கும்பாபிஷேக விழாவில் பிம்ப ரஷா பந்தனம் மூல மந்திர ஹோமம் ஸ்ப்ரிஷ ஹீதி
யாத்ரா தானம் உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றன இதைத்தொடர்ந்து காலை 9 மணி அளவில் யாகசாலையில் இருந்து மேளதாளங்களுடன் கடம் புறப்பட்டு ஆலயத்தில் விமான கலசங்களுக்கு பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது பின்னர் அருள்மிகு ஸ்ரீ விசிறி விநாயகர் மற்றும் பகவான் யோகிராம் சுரத்குமாருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வ இளநீர் சந்தனம் திருநீர் உள்பட பல்வேறு விசேஷ பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டதை தொடர்ந்து அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு ஆலயத்தில் நடைபெற்ற அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவு அருந்தி பக்தர்கள் சென்றார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.