வட்டாட்சியர் அலுவலகத்தில் பெயர் பலகை எங்கே சமூக ஆர்வலர்கள் கேள்வி..? நாங்கள் அரசு தேர்வில் படித்து தேறி விடுவோம் ஆனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதில் சிரமம் மாணவர்கள் வேதனை..!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெயர் பலகை இல்லை பெயர் பலகை எங்கே என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் அதேசமயம் மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்காமல் காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுகிறது.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள படித்த மாணவர்கள் கூறுகையில் நாங்கள் அரசு பொதுத்தேர்வில் கூட கஷ்டப்பட்டு படித்து வெற்றி பெற்று விடுகிறோம். மேல் படிப்பு படிப்பதற்கு தேவையான முதல் பட்டதாரி, வருமானம், சாதி சான்றிதழ் போன்ற இன்னும் பல சான்றிதழ் வாங்குவது கேள்விக்குறியாக உள்ளது. யாரிடம் கேட்பது என்று தெரியாமல் மாணவச் செல்வங்கள் புலம்புகிறார்கள்.

இது தொடர்பாக நாமும் களத்தில் இறங்கி ஆய்வு செய்தோம் மாணவர்கள் தயவுசெய்து எங்கள் பெயரை வெளியிடாதீர்கள் இதனால் நான் மேல் படிப்பு படிப்பது மிகவும் கேள்விக்குறியாகி விடும் வேதனையுடன் தெரிவித்தார் மேலும் சான்றிதழுக்கு விண்ணப்பித்து மாணவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை அதற்குள் அவர்களுக்கு கவுன்சிலிங் போன்றவை முடிந்துவிடும், இவர்கள் எவரும் படிக்கவில்லை முதல் பட்டதாரி சான்றிதழ் தேவைப்படுகிறது அதற்கு விண்ணப்பித்து இருந்தனர் ஆனால் சான்றிதழ் பெறும் பொழுது அப்பாவின் பெயருக்கு பதிலாக தாத்தாவின் பெயரும் தங்கையின் பெயருக்கு பதிலாக மனைவி பெயரும் உள்ளது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உண்மையாலும் இது வேதனையாக இருக்கிறது அரசு குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது ஆனால் சான்றிதழ்கள் கிடைக்கவில்லை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நாம் கேட்கும் பொழுது சான்றிதழ் தவறுகளை சரி செய்வது எங்களுடைய வேலை கிடையாது சான்றிதழை தள்ளுபடி செய்து மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பம் செய்யுங்கள் என்று எளிதில் கவலைப்படாமல் வேதனைப்படாமல் கூறுகிறார்கள்.

சான்றிதழை தள்ளுபடி செய்வதும் எங்கள் வேலை இல்லை என்று சொல்லி நழுவி விடுகிறார்கள் என்பது எதார்த்தமான உண்மை. மாவட்ட நிர்வாகமே அப்பாவி அடித்தட்டு குறைந்த சம்பளத்தில் வேலை செய்து தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். கடும் மழை காற்றிலும் தனது குழந்தைகளை அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி பெற வைத்து தேவையான சான்றிதழ் பெற முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றன இவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மாணவச் செல்வங்களுக்கு தேவையான சான்றிதழ் உடனுக்குடன் வழங்க ஏற்பாடு செய்து தருமாறும் நாமும் பொதுநலத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

-P.பரமசிவம் வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

வட்டாட்சியர் அலுவலகத்தில் பெயர் பலகை எங்கே சமூக ஆர்வலர்கள் கேள்வி..? நாங்கள் அரசு தேர்வில் படித்து தேறி விடுவோம் ஆனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதில் சிரமம் மாணவர்கள் வேதனை..!

Read More »