வாகன ஓட்டுனர்களை அச்சுறுத்தி வரும் காட்டெருமை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் பாலாஜி கோவில் செல்லும் வழியில் காட்டெருமை ஒன்று அவ்வழியே வரும் இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகன ஓட்டுனர்களை மிரட்டி அச்சுறுத்தி வருகிறது.  இதனால் இருசக்கர வாகனங்களை கீழே விட்டு விட்டு ஓடும் அவல நிலை உருவாகி உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நடுமலை இடைச்சோலை பகுதியில் சாலை ஓரங்களில்  உள்ள புதர்களை அகற்ற வேண்டும். புதர்க ளில் இருந்து காட்டெருமை மற்றும் வனவிலங்குகள் அவ்வழியே அதிகளவு நடமாடிக் கொண்டு உள்ளது. இதனால் வால்பாறையிலிருந்து பாலாஜிக்கு செல்லும் நடுமுலை இடைச்சோலை சாலையில் விபத்துக்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

சாலை அமைப்பு அதிகாரிகளிடம் கூறி எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதனால் அங்கு வேறு ஏதும் விபத்துக்கள் ஏற்படும் முன்னே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வரும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வாகன ஓட்டுனர்கள் புகார்கள் கூறி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பேபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts