கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சரகம் பச்சமலை எஸ்டேட் பகுதியில் கடந்த 20.06.2025 ஆம் தேதி சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமியின் உயிரிழப்பு பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை அடுத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையை தொடர்ந்து வனப்பகுதியில் வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கூண்டில் இன்று 26.06.2025 ஆம் தேதி அதிகாலை 05.45 மணிக்கு வனத்துறையின் கூண்டில் சிறுத்தை பிடிபட்டது.
இந்நிலையில் சிறுத்தையை வேறு இடத்தில் கொண்டு சென்று விடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களிடையே சிறுத்தை பிடிபட்டது மகிழ்ச்சியாக இருந்தாலும் குழந்தையின் இழப்பு அழியாத சுவடாக அனைவரும் மனதிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.