தவெக தலைவர் விஜய்யின் 51-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் தவெகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை தவெக வால்பாறை நகரத்தலைமையின் சார்பில் கழகத்தலைவர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமையிலும் நகர இனைச்செயலாளர் செய்யது அலி முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகள்
நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கப்கட்டது, தளபதியின் பெயரில்
கோவில்,தேவாலயம்,மசூதியில் சர்வமத பிரார்த்தனை, அரசு மருத்துவ மனை நோயாளிகளுக்கு நிவாரண பொருட்கள், மதியம் காந்திசிலை வளாகம்மற்றும் MKS மண்டபத்தில் சுமார் 1000 பேருக்கு அண்ணதாதனம் வழங்கப்பட்டது. MKS மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
தொடர்ந்து கலை நிகழ்வு, 10, 12 வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணக்கர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
முடிவில் பரிசளிப்பு விழாவும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச சேலை தொகுப்பும் வழங்கப்பட்டது. விழாவை பொருளார் ராஜ்குமார், இளைஞரணி அமைப்பாளர் ரியாஸ்,மாணவரணி அமைப்பாளர் ராபிக்,மகளிரணி ஏஞ்சல்,சங்கீதா,ஆணந்தி, தொண்டரணி மதி,நகரசெயற்க்குழு உறுப்பினர்கள் ராஜேஸ் கண்ணா சத்திய சீலன் ஆசைத்தம்பி,புவி சுதாகர் IT wing துறை,அஸ்வின் 14 வார்டு சதீஷ், முரளி,முகேஸ் பிரதீஸ் ஆகியோர் ஒருங்கினைத்தனர் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா இனிதே முடிவுற்றது.
விழாவை மகிழ்ச்சியுடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ் குமார்.