வால்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கிய அமைப்புகள் – மாணவர்கள் மகிழ்ச்சி!!

கோவை மாவட்டம் வால்பாறை இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI ), பாரதி இன்டஸ்ட்ரியல் மற்றும் லியோ ஸ்போர்ட்ஸ் எஜுகேஷன் டெஸ்ட் (LEO ) அமைப்புகள் இணைந்து வால்பாறை மற்றும் ஆனைமலை பகுதியில் பள்ளியில் படிக்கும் மாணவச் செல்வங்கள் நோட்டு புத்தகம் இல்லாமல் சிரமப்படக்கூடாது என்பதற்காக நோட்டு, ஸ்கேல், பென்சில், ரப்பர், ஜாமெட்ரி பாக்ஸ், கலர் பென்சில் இவைகளுடன் மாணவ செல்வங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கோவை மாவட்ட இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) நிர்வாகி தினேஷ் ராஜா, பாரதி இண்டஸ்ட்ரி ஸ்ரீதர், சுரேஷ், ஜெய்சீலன் லியோ ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் சசி ரியோ, ஆஸ்திரேலியா நண்பர் கார்த்திக் இவர்களுடன் வால்பாறை பரமசிவம் உள்ளிட்டோர் வழங்கினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வு பள்ளிக்கூடங்கள் திறந்த முதல் நாள் அன்று தரமான பொருட்களை வழங்கிய அமைப்புகளுக்கு ஆசிரியர் பெருமக்களும், மாணவர் செல்வங்களும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் மேலும் பள்ளியின் முதல் நாளே இவர்களின் வருகை தந்தது வரவேற்கக் கூடியது என்று பாராட்டி வரவேற்றனர்.

இது தொடர்பாக வால்பாறை P.பரமசிவம் கூறுகையில்; “கடும் மழையிலும் குண்டும் குழியிலும் சாலைகளே இல்லாத பகுதிகளுக்கு நேரடியாக மாணவர்களை சந்தித்து அவர்கள் படும் சிரமத்தை அறிந்து அவர்களுக்கு இந்தியா ஜனநாயக வாலிப சங்கமம், லியோ ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கும், பாரதி இன்டெர்சியலுக்கும், இதற்கு உதவிய அனைத்து நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கும் மாணவர்கள் சார்பாக எங்கள் அமைப்பின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. என்ற சிந்தனையோடு

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts