விளாத்திகுளம் அருகே வைகாசிமாத கொடை விழாவை முன்னிட்டு அக்கினிச்சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குமாரசக்கணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் மற்றும் செண்பக விநாயகர் கோவிலின் வைகாசி மாத கொடை விழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் மற்றும் விநாயகருக்கு பால், மஞ்சள், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு விஷேச திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்து நன்கு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் சாமிகளுக்கு தீபாரணை நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் இருந்து பட்டாசுகள் வெடித்து, வானவேடிக்கை, நையாண்டி மேளதாளம் என கோலாகலமாக அக்னிச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மேலும் வைகாசி மாத கொடை விழாவை முன்னிட்டு கோவில் நடைபெற்ற இதில் கிராமத்து பொறுப்பாளர்கள்
தனுஷ்கோடி பரமசிவம்,
கந்தசாமி சேகர்,
சுந்தர கணபதி மாடசாமி,
சண்முகராஜ் s மாடசாமி,
எஸ் என் கண்ணாயிரம்,
கந்தசாமி,
நாகலிங்கம் ராமசாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை மனம் உருகி வழிபட்டு சென்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts