
ஆசாத் நகர் ஃபெளசுல் இஸ்லாம் ஜமாஅத் சார்பில் SSLC மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
https://youtu.be/WbSNUjSo8bI
கோவை ஆசாத் நகர் ஃபெளசுல் இஸ்லாம் ஹனபி சுன்னத் ஜமாஅத் மற்றும் ஃபின்னா டியூஷன் சென்டர் இணைந்து, 2024–2025 கல்வியாண்டில் SSLC தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழா விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்று மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன:
•முஹம்மத் நியாஸ் M – 474/500 மதிப்பெண்கள்
•முஹம்மத் தன்சீம் S – 471/500 மதிப்பெண்கள்
•ஷியாஸ் அஹமத் Y – 467/500 மதிப்பெண்கள்

மேலும், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 40 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் கரும்புக்கடை காவல் நிலைய ஆய்வாளர் திரு. தங்கம் அவர்கள், தமிழ்நாடு கூட்டுறவு சார் பதிவாளர் திரு. நிசார் அவர்கள், மற்றும் தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மென்ட் அத்தாரைஸ்டு பார்ட்னர் மற்றும் PPS குழும இயக்குநர் திரு. அப்சல்
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினர்

நிகழ்ச்சியில் தலைமை ஏற்ற ஃபெளசுல் இஸ்லாம் ஜமாஅத் தலைவர் A.S.M இஸ்மாயில்.வரவேற்புரை வழங்கியவர் செயலாளர் PPS ஷாஹுல் ஹமீத்.கிராத் ஓதி விழாவைத் தொடக்கி வைத்தார் அப்துல்லா அஜரத்.வாழ்த்துரை வழங்கினர் ஜமாஅத் தலைமை இமாம் முஹம்மது இம்தாதி அஜரத், முத்தவல்லி நாகூர் மொய்தீன், மற்றும் ஃபின்னா ட்யூஷன் சென்டர் தலைமை ஆசிரியர்கள் அபுல் ஹசன் மற்றும் அஸ்கர்.

விழாவின் சிறந்த தொகுப்பு மேற்கொண்ட ஜமாஅத்தின் துணை செயலாளர் செய்யது அலி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஹனீபா, KPS இப்ராஹிம்சா,காதர், மரைக்காயர்,சம்சு ,பீர், ஜாபர்,ஹமீத், மைதீன், அபு மூஜி மைதீன் ஆகியோர்.

விழாவில் ஜமாஅத் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினர்.
மாணவர்களின் கல்வித் திறனையும், பாடப்பயிற்சியில் அவ்வளவையும் ஊக்கப்படுத்தும் வகையில் இந்த விழா ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– கரும்புக்கடை ஜாபர்.